/* */

வள்ளியூர் அருகே விபத்து ஏற்படுவதை தடுக்க சாலையில் வர்ணம் தீட்டி விழிப்புணர்வு

கோவனேரி அருகே விபத்தை ஏற்படுத்தும் வேகத்தடையை வர்ணம் தீட்டி விழிப்புணர்வு செய்த வள்ளியூர் காவல் துறையினர்.

HIGHLIGHTS

வள்ளியூர் அருகே விபத்து ஏற்படுவதை தடுக்க சாலையில் வர்ணம் தீட்டி விழிப்புணர்வு
X

வள்ளியூர் பகுதிகளில் வேகத்தடை உள்ள இடங்களில் காவல் துறையினர் வர்ணம் பூசி சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோவனேரி அருகே உள்ள அணுகு சாலையில் வேகத்தடை உள்ளது. வேகத்தடை இருப்பதை அறியாமல் வாகன ஓட்டிகளால் அப்பகுதியில் விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் வள்ளியூர் காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீதுவிடம், வேகத்தடை இருப்பதை அறியாமல் விபத்து ஏற்படுகிறது என்று கோரிக்கை வைத்தனர். இதன்படி வள்ளியூர் காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது,மற்றும் காவலர்கள் நம்பிராஜன்,சக்திவேல் ஆகியோர் சம்பவ இடம் சென்று வேகத்தடை இருப்பது அனைவருக்கும் தெரியும் வண்ணம் சாலையில் வர்ணம் பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் வள்ளியூர் பகுதிகளில் வேகத்தடை இருப்பதை தெரியும் வண்ணம் வேகத்தடை உள்ள இடங்களில் காவல் துறையினர் வர்ணம் பூசி சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். காவல்துறையினரின் இச்செயலை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாரை வெகுவாக பாராட்டினர்.

Updated On: 15 Feb 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  2. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  4. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  5. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  8. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  9. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  10. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...