/* */

திருச்சி பாலக்கரை போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு

திருச்சி பாலக்கரை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உடல்நலக்குறைவால் திடீர் என இறந்தார்.

HIGHLIGHTS

திருச்சி பாலக்கரை போலீஸ் நிலைய  சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு
X

சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கணேசன்

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்துள்ள கோவண்டா குறிச்சியை சேர்ந்தவர் கணேசன் (வயது 58). இவர் திருச்சி மாநகர காவல் துறை பாலக்கரை போலீஸ் நிலையத்தில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தனது மனைவி, மகன், மகள் ஆகியோருடன் வசித்து வந்தார்.

திருச்சி மாநகரில் உள்ள கண்டோன்மென்ட், எடமலைப்பட்டிபுதூர், உறையூர், கோட்டை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே சிறப்பாக பணியாற்றிய இவர் கடந்த 2 வருடங்களாக திருச்சி பாலக்கரை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.‌

கடந்த சில வருடங்களாக இவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு செயல் இழந்ததால் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக தனியார் மருத்துவமனையில் டயாலிசஸ் சிகிச்சை பெற்று வந்த கணேசன் இன்று காலை சிகிச்சை பலன் இன்றி திடீரென இறந்து விட்டார்.‌

Updated On: 4 Oct 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்