ரூ.1.43 கோடி தங்க நகைகள் கடத்தல்- 3 பேர் கைது

ரூ.1.43  கோடி தங்க நகைகள் கடத்தல்- 3 பேர் கைது
X

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.43 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை கடத்தி வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானப் பயணிகளிடம் விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.‌ அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த கலீல் ரகுமான், ரகுமான், காரைக்காலைச் சேர்ந்த மாலினி ஆகிய 3 பயணிகள் தங்கள் உடைமைகளில் சுமார் 2930 கிராம் எடை கொண்ட ரூ.1 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்கள் மூவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture