/* */

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மு.க. ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மு.க. ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு
X

தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் இன்று திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்புக்கு பின்னர் திருச்சி சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்னர் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திடீரென திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்திற்கு சென்றார் .அங்கு மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் மருத்துவமனைகள் மற்றும் தாய் சேய் நல விடுதிகளில் செயல்பாடுகள் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது அமைச்சர் கே .என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் முஜிபுர் ரகுமான் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 30 May 2022 2:57 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்