/* */

திருச்சியில் குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

திருச்சியில் குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது செய்து காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் நடவடிக்கை

HIGHLIGHTS

திருச்சியில் குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது
X

திருச்சி பொன்மலைப்பட்டி ரோடு பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி சின்ராஜ் (வயது 22) என்பவரை சிலர் வெட்டி படுகொலை செய்தனர். இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சச்சின் (22), ராக்கி என்ற ராகேஷ் (19), அலெக்ஸ் என்ற அலெக்சாண்டர் மற்றும் சரத் என்ற சரத்குமார் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் அலெக்ஸ் மற்றும் சரத்குமார் ஆகியோர் மீது ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

தற்போது சின்ராஜ் கொலை வழக்கில் தொடர்புடைய சச்சின், ராகேஷ் ஆகியோர் மீது மேலும் ஒரு கொலை வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பொன்மலை காவல் ஆய்வாளர், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆணையர் உத்தரவிட்டார்.

இதேபோல திருச்சி கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஓயாமரி சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் கடந்த செப்டம்பர் மாதம் 29-ந் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பாக்கியராஜை (வயது 39) வழிமறித்து ரூ.200 மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற மணிகண்டனை(வயது 23) கோட்டை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மணிகண்டன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Updated On: 20 Nov 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி