/* */

திருச்சி பேராசிரியையிடம் நகை பறித்தவர் 2 ஆண்டுகளுக்கு பின்னர் கைது

திருச்சி பேராசிரியையிடம் நகை பறித்தவர் 2 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருச்சி பேராசிரியையிடம் நகை பறித்தவர் 2 ஆண்டுகளுக்கு பின்னர் கைது
X

திருச்சி கே. கே. நகர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட இரஞ்சிதபுரம் பஸ் நிறுத்தம் அருகே கடந்த 19 -2 -2020 அன்று அரசு பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியை ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடினார்.இதுபற்றி பேராசிரியை அளித்த புகாரின் பேரில் கே.கே. நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இன்று சம்பந்தப்பட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் ராகுல் (வயது21).காஜாமலையை சேர்ந்தவர் அவரிடம் இருந்து பேராசிரியையிடம் வழிப்பறி செய்த இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கச் சங்கிலி பரிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் குற்றவாளியைக் கைது செய்த கே.கே. நகர் குற்றப்பிரிவு போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பாராட்டினார்.

Updated On: 20 April 2022 2:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  3. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  4. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  5. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  6. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  7. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  8. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி
  9. ஈரோடு
    பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டு...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் நாடகத்தின் அரங்கேற்ற நாள், திருமணம்..! வாங்க வாழ்த்தலாம்..!