Begin typing your search above and press return to search.
கடையை காலி செய்ய மறுத்தவர் மீது கோர்ட் உத்தரவின் படி போலீசார் வழக்கு
திருச்சி பெரியகடை வீதியில் பாத்திரக்கடையை காலி செய்ய மறுத்ததால் கோர்ட் உத்தரவின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
HIGHLIGHTS
திருச்சி பெரிய கடை வீதி மேற்கு ராணி தெருவை சேர்ந்தவர் சுகுமார் (வயது 74). இவருக்கு சொந்தமான பெரிய கடைவீதியில் உள்ள ஒரு கட்டிடத்தை, பெரிய கடை வீதி பகுதியிலுள்ள லட்சுமி அம்மாள் (வயது 80) என்பவருக்கு கடந்த 1997-ஆம் வருடம் வாடகை ஒப்பந்த பத்திரம் மூலம் எழுதி வாடகைக்கு விட்டுள்ளார்.
இந்த கடையை லட்சுமி அம்மாள் காலி செய்ய மறுத்து, தொடர்ந்து போலியான வாடகை ஒப்பந்த பத்திரம் தயார் செய்தது சம்பந்தமாக திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்1-ல் சுகுமார் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு சம்பந்தமாக திருச்சி கோட்டை குற்றப்பிரிவு போலீசார் கோர்ட் உத்தரவின்படி வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட பாத்திர கடைகாரர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.