/* */

கடையை காலி செய்ய மறுத்தவர் மீது கோர்ட் உத்தரவின் படி போலீசார் வழக்கு

திருச்சி பெரியகடை வீதியில் பாத்திரக்கடையை காலி செய்ய மறுத்ததால் கோர்ட் உத்தரவின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

கடையை காலி செய்ய மறுத்தவர் மீது கோர்ட் உத்தரவின் படி போலீசார் வழக்கு
X

திருச்சி கோட்டை காவல் நிலையம் (பைல் படம்)

திருச்சி பெரிய கடை வீதி மேற்கு ராணி தெருவை சேர்ந்தவர் சுகுமார் (வயது 74). இவருக்கு சொந்தமான பெரிய கடைவீதியில் உள்ள ஒரு கட்டிடத்தை, பெரிய கடை வீதி பகுதியிலுள்ள லட்சுமி அம்மாள் (வயது 80) என்பவருக்கு கடந்த 1997-ஆம் வருடம் வாடகை ஒப்பந்த பத்திரம் மூலம் எழுதி வாடகைக்கு விட்டுள்ளார்.

இந்த கடையை லட்சுமி அம்மாள் காலி செய்ய மறுத்து, தொடர்ந்து போலியான வாடகை ஒப்பந்த பத்திரம் தயார் செய்தது சம்பந்தமாக திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்1-ல் சுகுமார் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு சம்பந்தமாக திருச்சி கோட்டை குற்றப்பிரிவு போலீசார் கோர்ட் உத்தரவின்படி வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட பாத்திர கடைகாரர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 Nov 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க