/* */

திருச்சியில் ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து ரூ.21 லட்சம் அபராதம் வசூல்

திருச்சியில் ஊரடங்கை மீறியவர்கள்-முககவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.21 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

திருச்சியில் ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து ரூ.21 லட்சம் அபராதம் வசூல்
X

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரானை கட்டுப்படுத்தும் வகையில் தினமும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பொது மக்களுக்கு போலீசார் மற்றும் அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்தவகையில் திருச்சி மாநகரின் முக்கிய சந்திப்பு பகுதிகள், முக்கிய சாலை சந்திப்புகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சாலையின் குறுக்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு, தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவர்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோரை நிறுத்தி விசாரணை செய்து, முககவசம் அணிந்து இருக்கிறார்களா? என்று உறுதி செய்யப்படுகிறது. மேலும் உரிய காரணமின்றி வெளியே சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராத தொகை வசூல் செய்யப்பட்டது.

அந்த வகையில் கடந்த 6-ந்தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து முககவசம் அணியாமல் வந்த 9,734 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.19 லட்சத்து 46 ஆயிரத்து 800 அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக இடைவெளியின்றி செயல்பட்டவர்கள் மற்றும் ஊரடங்கின் போது கடைகளை திறந்து வைத்திருந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மொத்தம் ரூ.21 லட்சம் அபராத தொகையாக வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 19 Jan 2022 6:55 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  4. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  6. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  7. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  10. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது