/* */

திருச்சி ஜே.கே.நகரில் மழையால் பாதிக்கப்பட்ட தெருக்களை சீரமைக்கும் பணி

திருச்சி ஜே.கே.நகரில் மழையால் பாதிக்கப்பட்ட தெருக்களை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

HIGHLIGHTS

திருச்சி ஜே.கே.நகரில் மழையால் பாதிக்கப்பட்ட தெருக்களை சீரமைக்கும் பணி
X

திருச்சி ஜேகேநகரில் மழையால் பாதிக்கப்பட்ட தெருக்களை  சீரமைக்கும் பணி நடந்தது.

திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டம் 35வது வார்டில் உள்ளது ஜே.கே. நகர். விரிவாக்க பகுதியான இங்கு 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக இங்குள்ள அனைத்து தெருக்களிலும் காலி மனைகளிலும் தண்ணீர் தேங்கியது .

மேலும் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகளில் தண்ணீர் தேங்கியதால் நடக்க கூட முடியாத நிலை ஏற்பட்டது. சில தெருக்களில் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் செல்ல முடியவில்லை. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

இதுபற்றி ஜே.கே.நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜிடம் எடுத்துகூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஜல்லி கற்கள் கொட்டி தற்காலிகமாக தெருக்களுக்கு செல்லும் பாதைகளை சீரமைக்க சட்டமன்ற உறுப்பினர் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில் மாநகராட்சி சார்பில் தற்போது ஜே.கே.நகரின் அனைத்து தெருக்களிலும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. துரித நடவடிக்கை எடுத்த சட்டமன்ற உறுப்பினருக்கு ஜே.கே.நகர் பகுதி மக்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.





Updated On: 4 Nov 2021 12:58 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  3. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  4. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  5. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  6. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  7. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  9. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  10. திருப்பரங்குன்றம்
    கூடலழகர் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!