/* */

திருச்சியில் குட்கா, கஞ்சா விற்றதாக 40 பேர் கைது: போலீஸ் கமிஷனர்

திருச்சியில் குட்கா, கஞ்சா விற்றதாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நடவடிக்கை தொடரும் எனவும், போலீஸ் கமிஷனர் எச்சரித்துள்ளார்.

HIGHLIGHTS

திருச்சியில் குட்கா, கஞ்சா விற்றதாக 40 பேர் கைது: போலீஸ் கமிஷனர்
X

போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் 

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், குட்கா மற்றும் கஞ்சா விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுரைகள் வழங்கியுள்ளார். அதன்படி திருச்சி மாநகரத்தில் ஒரு வாரத்தில் மட்டும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக பதிவு செய்து , வழக்கின் எதிரிகளான 40 நபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், அவர்களிடம் இருந்து மொத்தம் 610 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தும் , குட்கா பொருட்களை விற்பனை செய்ய பயன்படுத்திய ஒரு மூன்று சக்கர வாகனம் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 25 Dec 2021 8:30 AM GMT

Related News