/* */

பக்தர்கள் வெள்ளத்தில் உறையூர் வெக்காளியம்மன் கோவில் தேரோட்டம்

பக்தர்கள் வெள்ளத்தில் உறையூர் வெக்காளியம்மன் கோவில் தேரோட்டம் இன்று மிக சிறப்பாக நடந்தது.

HIGHLIGHTS

பக்தர்கள் வெள்ளத்தில் உறையூர் வெக்காளியம்மன் கோவில் தேரோட்டம்
X

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் தேரோட்டத்தில் அமைச்சர் நேரு கலந்து கொண்டார்.

சோழர்களின் தலைநகராம் உறையூரில் வானத்தையே கூரையாக கொண்டு எழுந்தருளி மக்களை காத்தருளும் தெய்வம் வெக்காளியம்மன். இக்கோவிலில் ஆண்டு தோறும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று நடைபெறும் தேரோட்ட விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்த ஆண்டிற்கான சித்திரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை வெகுவிமரிசையாக நடந்தது.தேரோட்டத்தை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கேஎன்நேரு தொடங்கி வைத்தார். இதில் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தார்.


இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து அம்மனை வழிபட்டனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக தேரோட்டம் நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு நடந்த தேரோட்டம் பக்தர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பக்தர்கள் வெள்ளத்தில் தேர் மிதந்து வந்தது.

Updated On: 14 April 2022 11:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்