/* */

திருச்சியில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது

திருச்சியில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறித்த வாலிபரை கோட்டை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது
X

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தேவமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஞானமுருகன் மகன் மாரியப்பன் (வயது 20). இவர் நேற்று மதியம் சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து அரியலூர் பஸ் நிலையம் பகுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென மாரியப்பனின் சட்டைப்பையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடினார். உடனே சுதாரித்துக்கொண்ட மாரியப்பன் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தார். பின்னர் போலீசார் விசாரணையில் செல்போனை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியது, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வடக்கு சரித்திரத்தை சேர்ந்த பழனி மகன் முகேஸ்வரன் என்கிற சிவக்குமார் (வயது 23) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து, அவரிடம் இருந்த ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 29 Oct 2021 4:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது