/* */

திருச்சி சரகத்தில் கள்ளச்சந்தையில் மது விற்ற 223 பேர் கைது: போலீசார் அதிரடி

திருச்சி சரகத்தில் கள்ளச்சந்தையில் மது விற்றதாக 223 பேரை கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

திருச்சி சரகத்தில் கள்ளச்சந்தையில் மது விற்ற 223 பேர் கைது: போலீசார் அதிரடி
X

பைல் படம்.

திருச்சி சரகத்திற்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலுார், அரியலுார் ஆகிய மாவட்டங்களில் போதை பொருள் விற்பனை தொடர்பாக சோதனை நடைபெற்றது. இதில் 93 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டதோடு, 243 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து திருச்சி சரகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை தொடர்பாக அதிரடி சோதனை நடைபெற்றது. இது தொடர்பாக திருச்சியில் 60 வழக்குகள், புதுக்கோட்டையில் 48 வழக்குகள், கரூரில் 52 வழக்குகள், பெரம்பலுாரில் 32 வழக்குகள், அரியலுாரில் 31 வழக்குகள் என மொத்தம் 223 வழக்குகள் பதியப்பட்டு, 223 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான 2 ஆயிரத்து 345 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On: 4 Dec 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...