Begin typing your search above and press return to search.
திருச்சி அருகே கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்த இளைஞர் கைது
திருச்சி அருகே கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
திருச்சி குழுமணி பஜார் கலியமூர்த்தி ஸ்டோரை சேர்ந்தவர் நடராஜன் (வயது 58).பொன்மலைப்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் அரிவாள் முனையில் நடராஜனை மிரட்டி பணத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். இது குறித்து நடராஜன் பொன்மலை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து இளைஞரை தேடி வந்தனர்.
இந்நிலையில், பொன்மலை தங்கேஸ்வரி நகரைச் சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து கத்தி மற்றும் பணம் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.