Begin typing your search above and press return to search.
திருச்சி பொன்மலை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
திருச்சி பொன்மலை அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
திருச்சி பொன்மலைப்பட்டி, மஞ்சதிடல் ரயில்வே கேட் அருகே, பொன்மலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரசிங்கம் தலைமையிலான போலீசார், அதிரடி வாகனச்சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு கஞ்சா விற்றதாக அரியமங்கலம் காமராஜ் நகரைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ ( வயது 19) என்ற வாலிபரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் இருந்து கஞ்சா மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.