/* */

கோவிலுக்கு செல்லும் பாதையை அடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்

கோவிலுக்கு செல்லும் வழியை அடைத்து, கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது திருவெறும்பூர் தாசில்தாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கோவிலுக்கு செல்லும் பாதையை அடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்
X
கோவில் பாதை பிரச்சினை சம்பந்தமாக  திருவெறும்பூர் தாசில்தாரிடம் புகார் மனு அளிக்க வந்தவர்கள்.

திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் எம்.ஐ.டி. 100 அடி சாலை அய்யனார் நகர் விஸ்தரிப்பு பகுதியில் பட்டியல் இன மக்களின் (இந்து குறவர்கள்) குல தெய்வமான அகோர வீரபத்திரன், பொம்மக்கா, இலாட குருசன்னாசி, நாகம்மா, மதுரைவீரன் ஆகிய கோவில்கள் உள்ளது.

இந்த கோவில் அந்த பட்டியலினத்தைச் சேர்ந்த 300 குடும்பங்கள் குலதெய்வமாகவும், வழிபாட்டு தெய்வமாக 200 ஆண்டுகளாக இருந்து வருகிறது.

அந்த கோவிலில் தை மற்றும் ஆடி மாதங்களில் விழாக்கள் நடைபெறும். அப்பொழுது இந்த கோவிலில் வழிபடும் 300 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடி விழா நடத்துவது வழக்கம்.

அந்த பகுதியில் அய்யனார் கோவில் உள்ளது. அந்தக் கோவிலுக்கும் பட்டியலின மக்கள் வழிபடும் கோவிலுக்கு செல்வதற்கு 40 அடி அகலத்திற்கு பாதை இருந்ததாகவும் இதனால் திருவிழாக்காலங்களில் எளிதாக சென்று வருவதோடு வழிபாடு செய்து வந்தனர்.

இந்நிலையில் அய்யனார் கோவிலை நிர்வகித்து வருவதாக கூறும் சிலர் பட்டியலின மக்கள் கோவிலுக்கு செல்லும் பாதையை மதில் சுவர் எழுப்பி அடைத்து உள்ளதாகவும் இதனால் அந்த கோவிலுக்கு செல்ல முடியாமல் அவதியுற்று வருவதோடு இது குறித்து சம்பந்தப்பட்ட அய்யனார் கோவில் நிர்வாகிகளிடம் கேட்டதற்கு அவர்கள் பாதையை விட முடியாது என்றும் மேலும் அவர்களை ஜாதி பெயரை சொல்லி இழிவாக பேசியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக மெய்யநாதன் (வயது 37) என்பவர் பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர் இந்திரன் தலைமையில் திருவெறும்பூர் தாசில்தார் செல்வகணேஷிடம் புகார் கொடுத்தனர்.

அப்பொழுது தாங்கள் வழிபடும் கோவிலுக்கு செல்வதற்கு பாதையை ஏற்படுத்தி தருவதுடன் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து ஜாதி பெயரை கூறி இழிவாக பேசியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.

அந்த மனுவின் நகலை திருச்சி கலெக்டர், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர், திருச்சி எஸ்.பி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், திருவெறும்பூர் நவல்பட்டு இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கும் அனுப்பி உள்ளனர்.

Updated On: 26 Jan 2022 2:34 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது