திருச்சியில் குடும்ப தகராறால் அண்ணன் அடித்துக் கொலை: தம்பி கைது
பைல் படம்.
திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியை சேர்ந்தவர் கார்மேகம் (வயது 52). காவலாளியான இவருக்கு வெங்கடேசன் (வயது 33) என்ற தம்பி உள்ளார். இவர் உள் அரியமங்கலம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 1-ஆம் தேதி தனது அண்ணன் கார்மேகம் வீட்டிற்கு வெங்கடேசன் சென்றுள்ளார். அங்கு அவர்களுக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் அருகிலிருந்த இரும்பு கதவில் மோதியதில் கார்மேகத்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து கார்மேகத்தை உறவினர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதனைத்தொடர்ந்து கார்மேகம் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய அரியமங்கலம் போலீசார் வெங்கடேசனை கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu