/* */

திருச்சி அருகே இரட்டை தலையுடன் பிறந்த ஆட்டு குட்டி; பாெதுமக்கள் வியப்பு

மணப்பாறை அருகே விவசாயியின் ஆடு ஒன்று இரட்டை தலையுடன் கூடிய குட்டியை ஈன்றுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

திருச்சி அருகே இரட்டை தலையுடன் பிறந்த ஆட்டு குட்டி; பாெதுமக்கள் வியப்பு
X

இரட்டை தலையுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வில்லுக்காரன்பட்டியை சேர்ந்த விவசாயி வேலுச்சாமி. இவர் விவசாயத்துடன் கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் அவரது தோட்டத்தில் கருவுற்று இருந்த வெள்ளாடு இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் ஒரு குட்டி இரட்டை தலையுடன் கூடியதான குட்டி. ஓர் உடல் இரு தலைகள், நான்கு கண்கள், இரண்டு மூக்கு மற்றும் வாய் பகுதிகளை கொண்டுள்ளது. சாதரணமாக பிறந்த சில மணி நேரங்களிலேயே தாயிடம் பால் குடிக்கும் வழக்கம் கொண்ட ஆட்டுக்குட்டிகளில், இந்த இரட்டை தலை ஆட்டுக்குட்டி தலை பாரம் அதிகமானதால் பிஞ்சு கழுத்தால் இரு தலைகளையும் தூக்கிக்கொண்டு நிற்கக்கூட முடியாத நிலையில் உள்ளது.

அதனால் தாயிடம் சென்று பால் குடிக்கவும் முடியாமல் தவித்து வருகிறது. எனவே வேலுச்சாமி குடும்பத்தினர் அந்த குட்டிக்கு பால் பாட்டில் மூலம் பால் புகட்டி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி கால்நடை மருத்துவர்கள் விசாரித்து வருகின்றனர். இரட்டை தலையுடன் பிறந்துள்ள ஆட்டுக்குட்டியை அப்பகுதியில் பொதுமக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.


Updated On: 3 Aug 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...