/* */

மண்ணச்சநல்லூர் தொகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் எம்எல்ஏ கதிரவன் தொடங்கிவைத்தார்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதியில் இன்று 18 முதல் 45 வயதுடையவா்களுக்கான தடுப்பூசி முகாமை சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

மண்ணச்சநல்லூர் தொகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் எம்எல்ஏ கதிரவன் தொடங்கிவைத்தார்
X

திருச்சி மாவட்டம் சட்டமன்ற தொகுதியில் கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ கதிரவன் தொடங்கிவைத்தார்.

தமிழகத்தில் கொரானோ தடுப்பூசி போடும் முகாம்கள் துவங்கப்பட்டுள்ள நிலையில், இன்று திருச்சியில் மொத்தம் 8 மையங்களில் முகாம்கள் நடைபெற்று வருகிறது.அதன் ஒருபகுதியாக திருச்சி மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவா்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முகாமை மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினா் கதிரவன் துவக்கி வைத்தார்.

இன்று மட்டும் 300 பேருக்கு தடுப்பூசிகள் போட திட்டமிட்டுள்ளதாகவும், மருந்துகளின் வருகையை பொறுத்து தினமும் பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை போட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனா்.

மேலும் மண்ணச்சநல்லூர் ஒன்றிய அலுவலகத்தில் தயார் நிலையில் இருந்த நடமாடும் காய்கறி வாகனங்களை துவங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் நேற்று நடமாடும் காய்கறி வாகனங்கள் பொதுமக்களின் இருப்பிடத்திற்கே சென்று விற்பனை செய்யும் திட்டத்தை நேற்று வேளாண்மைதுறை சார்பில் துவங்கி வைத்த நிலையில், இன்று முதல் புறநகர் பகுதிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

தொடர்ந்து பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப முதல்கட்டமாக இரண்டு வண்டிகளும், கூடுதலாக வண்டிகள் இயக்கவும் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் ஸ்ரீதர் மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர்கள் செந்தில், வி எஸ் பி இளங்கோவன் திமுக நகர செயலாளர் சிவசண்முக குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர.

Updated On: 26 May 2021 6:00 AM GMT

Related News