/* */

தேசிய நெடுஞ்சாலை மறியலில் கைது செய்யப்பட்ட 27 பேர் சிறையில் அடைப்பு

திருச்சி தேசிய நெடுஞ்சாலை மறியலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட டிரைவர்கள் 27 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

தேசிய நெடுஞ்சாலை மறியலில் கைது செய்யப்பட்ட 27 பேர் சிறையில் அடைப்பு
X

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள மாந்துறையில் ஒரு வழிப்பாதை ஓட்டுனர் தொழிற்சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடத்த திட்டமிடப் பட்டதை அறிந்த மற்றொரு ஓட்டுனர்கள் சங்கமான உரிமைக்குரல் இருவழிப்பாதை ஓட்டுனர் தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு சங்கத்தினரிடையே மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து நம்பர் 1 டோல்கேட் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே கார்களை நிறுத்தி சாலையில் அமர்ந்து ஒருவழிப்பாதை ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட ராஜா (வயது 51), தண்டபாணி (52), ஆரோக்கியபிரபு (42), பாலசுப்ரமணி (37), காமேஷ் (27), முருகேசன் (30), ஏழுமலை (41) உள்பட 27 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 17 Dec 2021 8:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  7. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  8. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  9. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  10. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...