/* */

சமயபுரம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.09 கோடி

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.09 கோடி ரொக்கம், 3 கிலோ தங்கம் மற்றும் 5 கிலோ வெள்ளிப்பொருட்கள் பெறப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சமயபுரம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.09 கோடி
X

சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்துவர்.

இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் மாதம் 2 முறை எண்ணப்படுகிறது. இதன்படி, நேற்று கோவில் மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் தன்னார்வலர்கள், கோவில் பணியாளர்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உண்டியல் எண்ணிக்கை முடிவில், கடந்த 16 நாட்களில் கோயில் உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 9 லட்சத்து 80 ஆயிரத்து 784 ரொக்கம் வாசூலாகி உள்ளது. மேலும், 3 கிலோ 729 கிராம் தங்கம், 5 கிலோ 725 கிராம் வெள்ளி மற்றும் 140 வெளி நாட்டு கரன்சி நோட்டுகளும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளதாக கோவில் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்துள்ளார்.

Updated On: 11 Jun 2022 3:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!