/* */

தூத்துக்குடி-வீடுகளுக்கு நேரடியாக காய்கறிகள் விற்பனை-ஆட்சியர் தகவல்.

தூத்துக்குடி மாவட்டத்தில்வீடுகளுக்கு நேரடியாக காய்கறிகள் 13.42 டன் விற்பனை செய்யப்ட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தூத்துக்குடி-வீடுகளுக்கு நேரடியாக காய்கறிகள் விற்பனை-ஆட்சியர்  தகவல்.
X

தூத்துக்குடிமாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்.

தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு வீடுகளுக்கு நேரடியாக காய்கறிகள், பழங்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு : கோவிட் - 19 இரண்டாவது அலை பெருந்தொற்றிலிருந்து, பொது மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தமிழக அரசு இன்று (24.05.2021) முதல் ஒருவார காலத்திற்கு தளர்வில்லாத பொது முடக்கம் அறிவித்துள்ளது.

மேற்படி பொது முடக்கத்தின் போது அத்தியாவசிய தேவைகளில் காய்கறிகள், பழங்களின் இருப்பதால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் அறிவுரைகளின்படி, தோட்டக்கலைத்துறை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வேளாண் விற்பனைத்துறை ஆகியவற்றின் கீழ் செயல்படும் உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் மூலம் அனைத்து வட்டாரங்களிலும்; காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பொது மக்களின் இல்லங்களை தேடி காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வேளாண்மை துறையின் மூலம் 29 வாகனங்களிலும், தோட்டக்கலை துறையின் மூலம் 45 வாகனங்களிலும், வேளாண்மை விற்பனைத்துறையின் மூலம் 5 வாகனங்களிலும்; ஆக மொத்தம் 79 வாகனங்கள் மூலம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு இல்லம் தேடி 13.42 டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் இன்று மட்டும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து வரும் நாட்களிலும் இச்சேவை தொடரும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.



Updated On: 24 May 2021 4:11 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  3. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  5. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  7. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 50.78 அடியாக சரிவு..!
  8. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  9. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  10. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி