/* */

இலங்கைக்கு கடத்த முயன்ற மஞ்சள் பறிமுதல்,4 பேர் கைது

இலங்கைக்கு கடத்த முயன்ற மஞ்சள் பறிமுதல்,4 பேர் கைது
X

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த விராலி மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டு இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் விராலி மஞ்சளுக்கு மிக தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழக கடற்கரை வழியாக இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி முத்தையாபுரத்தை அடுத்துள்ள கோவளம் கடற்கரை பகுதியில் இலங்கைக்கு படகு மூலம் கடத்துவற்காக விராலி மஞ்சள் லாரி மூலமாக கொண்டு செல்லப்பட்டு கடல் வழியாக கடத்தப்பட உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் சென்ற போது லாரி சாலையில் சிக்கியதால் பிடிபட்டது.

இதனைத்தொடர்ந்து லாரியை சோதனை செய்த போலீசார், லாரியிலிருந்து மஞ்சள் தூள் 1.5 டன், விராலி மஞ்சள் 2.820 கிலோ, ஏலக்காய் 125 கிலோ மற்றும் சிகரெட் தாள் 125 பெட்டி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தை சார்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன், சாயல்குடியை சார்ந்த சுப்பிரமணியம், சாயர்புரத்தை சார்ந்த ஜெபமணி, அரிச்சந்திரன் உள்ளிட்ட நால்வரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 Jan 2021 7:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  2. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  3. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  4. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  6. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  7. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  8. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  9. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  10. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!