/* */

நன்னிலத்தில் அரசியல் கட்சியினருடன் போலீசார் ஆலோசனை

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, காவல்துறைச் சார்பில் நன்னிலத்தில் அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நன்னிலத்தில் அரசியல் கட்சியினருடன் போலீசார் ஆலோசனை
X

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. கொரோனா தொற்றின் காரணமாகத் தேர்தல் ஆணையமும், தமிழக அரசும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.

அத்துடன், வெற்றி பெறும் வேட்பாளர்கள், வெற்றிக் கொண்டாட்டங்களைத் தவிர்த்திட வேண்டுமெனவும், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் மட்டும் வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளது.
இந்த சூழலில், நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று, காவல்துறைச் சார்பாக அறிவுரை வழங்குவதற்காக, போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம், நன்னிலம் உட்கோட்டக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அ.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும், மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, காவல் துறை சார்பாக அறிவிக்கப்பட்டது.

இதில், நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். காவல்துறை ஆய்வாளர்கள் நன்னிலம் கு.சுகுணா, பேரளம் மு.மணிமாறன், குடவாசல் க.ரேகாராணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 1 May 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  5. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  6. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  7. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  8. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு