/* */

தொகுப்பூதிய செவிலியர்கள் கலந்தாய்வில் குளறுபடி என புகார்

தொகுப்பூதிய செவிலியர்கள் கலந்தாய்வில் பெருமளவு குளறுபடி நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

HIGHLIGHTS

தொகுப்பூதிய செவிலியர்கள் கலந்தாய்வில் குளறுபடி என புகார்
X

தொகுப்பூதிய செவிலியர்கள் கலந்தாய்வில் பெருமளவு குளறுபடி நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.இது தொடர்பாக இச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சுபின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணியிட மாற்ற கலந்தாய்வு தற்போது நடத்தப்படுகிறது. இதை வரவேற்கிறோம். அதேநேரம் கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பது வருத்தமளிக்கிறது.

இக் கலந்தாய்வில், ஏற்கெனவே உள்ள காலி பணியிடங்கள் பட்டியலில் காண்பிக்கப்படாமல் ஒரு சில இடங்கள் மட்டுமே காண்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 80 பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில் வெறும் 2 பணியிடங்கள் மட்டுமே கலந்தாய்வில் காண்பிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 27 காலி பணியிடங்களுக்கு 6 பணியிடங்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 45 பணியிடங்களுக்கு 9 பணியிடங்களும், தருமபுரி மாவட்டத்தில் 56 பணியிடங்களுக்கு 16 பணியிடங்கள் மட்டுமே கலந்தாய்வில் காண்பிக்கப்பட்டுள்ளது.

பணியிட மாற்ற கலந்தாய்வுக்கு விண்ணப்பம் அளித்த செவிலியர்கள் பலரின் பெயர் கலந்தாய்வு பட்டியலில் இடம் பெறவில்லை. கடந்த காலங்களில் நடந்த கலந்தாய்வுகளில் முதல் நாளில் பங்கேற்று வேறு பணியிடத்தை தேர்வு செய்த செவிலியர்களின் பணியிடங்களை காலி பணியிடங்களாக அறிவித்து, மீண்டும் அந்த பணியிடங்களை செவிலியர்கள் தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. அதுவும் இந்த கலந்தாய்வில் மறுக்கப்பட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மையின்றி கலந்தாய்வு நடத்தப்படுவதால் பெரும்பான்மையான செவிலியர்கள் தாங்கள் விரும்பிய பணியிடத்தை தேர்வு செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர். இப்பிரச்சினையில் சுகாதாரத் துறை அமைச்சர், செயலர் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும். வெளிப்படைத்தன்மையுடன் பணியிட மாற்ற காலந்தாய்வை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 22 Nov 2023 6:00 PM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  2. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  8. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  10. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...