/* */

வங்கி வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க உதவும் புதிய செயலி

வாடிக்கையாளர்கள் தங்களது அக்கவுண்டில் இருந்து பணம் எடுக்க புதிய செயலி பல்வேறு வகைகளில் உதவுகிறது..

HIGHLIGHTS

வங்கி வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதை   தடுக்க  உதவும் புதிய செயலி
X

பைல் படம்

வங்கி வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம்., கார்டுகளை ேஹக் செய்து, பின் நம்பர், ஓ.டி.பி., நம்பர்களை திருடி மோசடிக் கும்பல், அவர்களது அக்கவுண்ட்டில் இருந்து பணம் எடுப்பதை தடுக்க வங்கிகள் புதிய செயலியை வடிவமைத்துள்ளன. தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ள இந்த செயலி மூலம் ஏ.டி.எம்., கார்டு இல்லாமல், நாமே ஒவ்வொரு முறையும் ஓ.டி.பி., நம்பரை தேர்வு செய்து, வங்கியில் பணம் எடுக்கலாம்.

வங்கிகளில் நிதி மோசடிகளில் ஈடுபடும் கும்பலிடம் இருந்து தமது வாடிக்கையாளர்களை காப்பாற்றுவது தான் வங்கிகளுக்கு இன்றுள்ள மிகப்பெரிய சவாலாக உள்ளது. வங்கி ஊழியர்களுக்கு திறம்பட பயிற்சி அளித்தாலும், புதிய புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வந்தாலும், அப்பாவி வாடிக்கையாளர்கள், குறிப்பாக பெண் வாடிக்கையாளர்கள் இந்த மோசடி கும்பலிடம் சிக்கிக் கொள்கின்றனர். வங்கிகளின் கணக்குப்படி தினமும் ஒரு மாவட்டத்தில் 10 முதல் 15 அப்பாவிகளாவது இந்த மோசடி கும்பலிம் ஏமாற்றம் அடைந்து பணத்தை இழக்கின்றனர். சில நேரங்களில் மிகப்பெரிய, திறமையான வாடிக்கையாளர்களே சிக்கி பணத்தை இழந்து விடுகின்றனர்.

தவிர ஏ.டி.எம்.,களில் ஸ்கிம்மர் கருவிகளை பொறுத்தி, கார்டுகளை ஸ்கேன் செய்து வாடிக்கையாளர்களிடம் பேசி, ஓ.டி.பி., வாங்கி பணம் திருடுவது ஒரு வகை. இந்த வகையில் ஒரு அக்கவுண்டில் இருந்து வேறு எந்த அக்கவுண்டிற்கு பணம் பறிமாற்றம் செய்யப்படுகிறது என்பது உடனே கண்டறியப்பட்டால், வங்கிகளே அந்த பணத்தை வாடிக்கையாளர்களுக்கு மீட்டு கொடுத்து விடுகின்றனர்.

இதனால் இந்த மோசடி கும்பல் தங்களது மொபைல் ஆப் மூலம் வங்கி வாடிக்கையாளர்களின் அக்கவுண்டை இயக்கி, அவர்களிடம் பேசி ஏமாற்றி ஓ.டி.பி., நம்பரை வாங்கி பர்சேஸ் செய்து விடுகின்றனர். இப்படி பர்சேஸ் செய்யப்பட்டால் அந்த பணத்தை மீட்பது சிரமம். தவிர வங்கிகளில் தற்போது உள்ள பணிச்சுமையில், தினமும் தனது வாடிக்கையாளர்கள் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்து தவிப்பதை பார்த்து அவர்களது பணம் எங்கே போனது என்று மீட்டுக் கொடுப்பது, அவர்களுக்கு புதிய ஏ.டி.எம்., கார்டுகளை போட்டுக் கொடுப்பது என கூடுதல் வேலை செய்ய வேண்டி உள்ளது. இதில் பல போலீஸ் குடும்பங்கள் மட்டுமின்றி, போலீஸ் அதிகாரிகளே கூட சிக்கி விடுகின்றனர் என்பது தான் மோசடி கும்பலின் தெளிவான அணுகுமுறைக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண வங்கிகள் புதிய செயலியை (ஆப்) உருவாக்கி உள்ளன. பாரத ஸ்டேட் வங்கி உட்பட பல வங்கிளில் தற்போது இந்த ஆப் மூலம் பரிவர்த்தனை நடந்து வருகிறது. பல வாடிக்கையாளர்கள் புதிய ஆப்பினை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

இந்த ஆப் -ஐ தனது மொபைலில் வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்து, வங்கியுடன் தொடர்பு கொள்ள முடியும். வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க வேண்டும் என்றால், அவர்களே இந்த ஆப் மூலம் புதிய ஓ.டி.பி., நம்பரை தேர்வு செய்து வங்கிக்கு அனுப்ப வேண்டும். வங்கிகள் ஓ.கே., செய்தவுடன் அந்த ஓ.டி.பி., நம்பரை ஏ.டி.எம்., எந்திரத்தில் பதிவு செய்து பணம் எடுத்துக்கொள்ளலாம்.

அதேசமயம் ஏ.டி.எம்., கார்டுகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த ஆப் முழு அளவில் செயல்பாட்டிற்கு வந்து விடும். ஒவ்வொரு வங்கியும், இந்த ஆப்பினை எப்படி செயல்படுத்துவது என்பதை தனது வாடிக்கை யாளர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்க தனி அலுவலர்களை நியமித்து வருகிறது. இந்த புதிய தொழில்நுட்பம் முழு பயன்பாட்டிற்கு வந்து விட்டால், வங்கி மோசடிகள் குறைந்து விடும். அந்தளவுக்கு திட்டமிட்டு இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது என தேனி வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 3 Dec 2023 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  3. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  4. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  5. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  8. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  10. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி