/* */

கம்பம் அருகே கேரளாவிற்கு கடத்தப்பட இருந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆந்திராவில் இருந்து கம்பம் வழியாக கேரளாவிற்கு கடத்தப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய போலீசார், 4 பேரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

கம்பம் அருகே கேரளாவிற்கு கடத்தப்பட இருந்த   10 கிலோ கஞ்சா பறிமுதல்
X

ஆந்திர மாநிலத்தில் இருந்து கம்பத்திற்கு கஞ்சா கடத்தப்படுவதாக கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த் தலைமையில் போலீசார் கம்பம் கோம்பை ரோடு தெருவில் ரோந்து சென்றனர். அப்போது நாககன்னிஅம்மன் கோயில் அருகே சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் சாக்குப்பையுடன் நின்றிருந்த 4 பேரை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில் அவர்கள் வைத்திருந்த சாக்குப்பையில் 10 கிலோ கஞ்சா இருந்தது.

பின்னர் அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கோம்பைரோடு தெருவை சேர்ந்த ருத்ரன் (வயது 26), ஞானேசன் (44), அலெக்ஸ் பாண்டியன் (24), நெல்லு குத்தி புளியமரம் தெருவை சேர்ந்த ஈஸ்வரன் (48) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்தனா். மேலும் அவர்களிடம் இருந்து கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On: 24 Aug 2022 3:53 AM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  5. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  6. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  8. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  10. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...