/* */

தேனி மாவட்டத்தில் பல அரசு பள்ளிகளில் மாணவர்கள் அமர கட்டட வசதி இல்லை

தேனி மாவட்டத்தில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், பல அரசு பள்ளிகளில் மாணவர்களை அமர வைக்க, கட்டடங்கள் போதவில்லை.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் பல அரசு பள்ளிகளில்  மாணவர்கள் அமர கட்டட வசதி இல்லை
X

கோப்பு படம் 

கொரோனா ஊரடங்கிற்கு பின்னர், அதிக மாணவர்கள் சேர்க்கையால் தேனி மாவட்டத்தில் பல அரசு பள்ளிகளில் மாணவர்கள் அமர போதிய அளவு கட்டடங்கள் இல்லை. கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் தேனி மாவட்டத்தில் மெட்ரிக் மற்றும் சுயநிதிப்பள்ளிகளில் படித்த மாணவர்கள்,அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். அரசு பள்ளிகளில் மாணவர்களி்ன் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.

ஆனால் தற்போது பெரும் பிரச்னையாக இருப்பது, கட்டட வசதிகள் இல்லை என்பதுதான். அத்தனை மாணவர்களையும் ஒரே நேரத்தில் அமர வைத்து பாடங்கள் நடத்தும் அளவு கட்டடங்கள் இல்லை. மழை பெய்வதால் மரத்தடி வகுப்புகளும் நடத்த முடியவில்லை. பள்ளிகளில் பல கட்டங்கள் சேதமடைந்துள்ளதால் அந்த கட்டடங்களிலும் மாணவர்களை அமர வைக்க முடியவில்லை.

இந்த பிரச்னை குறித்து கல்வித்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், கல்வித்துறை ஒவ்வொரு பள்ளியிலும் தேவைப்படும் புதிய கட்டட வசதிகள் குறித்து கணக்கெடுத்து அரசுக்கு பட்டியல் அனுப்பி உள்ளதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 4 Dec 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  2. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  3. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  4. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  5. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...
  7. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அளவிலான தீ, தொழில் பாதுகாப்பு குழுக் கூட்டம்
  9. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  10. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?