பிளஸ் 2 மாணவி தற்கொலைக்கு காரணமான மொபைல் போன்

பிளஸ் 2 மாணவி தற்கொலைக்கு  காரணமான மொபைல் போன்
X
போடி அருகே மொபைல் போனில் விளையாடுவதை தாய் கண்டித்ததால் மனம் உடைந்த பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

தேனி மாவட்டம் போடி குலாளர்பாளையம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் மலர்க்கொடி(வயது 37.) இவரது மகள் தாரணி,( 16. )இவர் பிளஸ் 2 படித்து வந்தார். மொபைல் போனில் அதிக நேரம் விளையாடியுள்ளார். இதன் காரணமாகவே பிளஸ் 1 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளார். தற்போது பிளஸ் 2 படிப்பதால் மொபைல் போனில் விளையாடக்கூடாது. கண்டிப்பாக படிக்க வேண்டும் தாய் கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த தாரணி, தனது பெட்ரூமில் சேலையால் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி