/* */

வாட்ச்மேனை அரிவாளால் மிரட்டிய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய வாட்ச்மேனை அரிவாளால் மிரட்டியவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

HIGHLIGHTS

வாட்ச்மேனை அரிவாளால் மிரட்டிய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
X

வாட்ச்மேனை அரிவாளால் மிரட்டிய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வாட்ச்மேனாக பணிபுரிபவர் மொக்கை. இவர் பணியில் இருக்கும் போது ராமர்கோயில் தெருவை சேர்ந்த ரிசாத் ராஜ் என்பவர் உடம்பில் சிராய்ப்பு காயங்களுடன் சிகிச்சைக்கு வந்தார்.

அங்கு பணியில் இருந்த டாக்டர் ஊசி போட்டு காயத்திற்கு மருந்து தடவி, மாத்திரை எழுதிக் கொடுத்து அனுப்பினர். வெளியே வந்த ரிசாத்ராஜ், வாட்ச்மேன் மொக்கையுடன் தகராறு செய்து, அவரை அரிவாளால் வெட்ட முயன்றார்.

சம்பவம் தொடர்பாக மொக்கை தேவதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் ரிசாத்ராஜை கைது செய்தனர். மதுரை மத்தியில் சிறையில் அடைக்கப்பட்ட அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு, தேனி எஸ்.பி., பிரவீன் உமேஷ்டோங்கரே கலெக்டருக்கு பரிந்துரைத்தார்.

ரிசாத்ராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டதன் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Updated On: 26 July 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  3. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  6. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  7. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!