/* */

பி.எஸ்.என்.எல்.சிக்னல் பழுது: 50 மலை கிராமங்களுக்கு தொலை தொடர்பு துண்டிப்பு

தேனி மாவட்டம், மயிலாடும்பாறையில் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் பழுது ஏற்பட்டுள்ளதால் 50க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களுக்கு தகவல் தொடர்பு வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பி.எஸ்.என்.எல்.சிக்னல் பழுது: 50 மலை கிராமங்களுக்கு தொலை தொடர்பு துண்டிப்பு
X

தேனி மாவட்டம், மயிலாடும்பாறையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக இப்பகுதியில் உள்ள ஐம்பதிற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தகவல் தொடர்பு வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், மயிலாடும்பாறை, வருஷநாடு, தும்மக்குண்டு, வாலிப்பாறை உள்ளிட்ட மலைக்கிராமங்களுக்கு பி.எஸ்.என்.எல்., மூலம் மட்டுமே மொபைல் போன் மற்றும் வில்போன் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. மேகமலை வனப்பகுதிக்குள் உள்ள கிராமங்கள் என்பதால் பிற தனியார் நிறுவன சேவைகள் இப்பகுதியில் இன்னும் அனுமதிக்கப்படவி்ல்லை.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மயிலாடும்பாறை பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் இயந்திரங்கள் பழுதடைந்துள்ளன. இதனால் ஒரு வாரத்திற்கும் மேலாக இங்கிருந்து கிடைக்கும் சிக்னல் மூலம் தகவல் தொடர்பு வசதிகள் பெற்ற ஐம்பதிற்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் பழுது நீக்கும் பணிகளை விரைந்து முடித்து இப்பகுதிகளில் சிக்னல் எளிதாக கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மலைக்கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 13 July 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்