/* */

பெரியகுளத்தில் சுற்றித்திரியும் மனநாேயாளிகள்: நடவடிக்கைக்கு பாெதுமக்கள் காேரிக்கை

பெரியகுளத்தில் மனநோய் பாதிக்கப்பட்டவர்களால் பொதுமக்களுக்கு பெரும் ்இடையூறு ஏற்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

பெரியகுளத்தில் சுற்றித்திரியும் மனநாேயாளிகள்: நடவடிக்கைக்கு பாெதுமக்கள் காேரிக்கை
X

பெரியகுளத்தில் சுற்றித்திரியும் மனநோயாளிகள்.

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் மனநோயாளிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இவர்கள் பொதுமக்கள், பெண்களுக்கு பெரும் தொல்லையாக மாறி வருகின்றனர். ரோட்டில் செல்லும் பெண்களின் மீது உரசுவது போல் மிக நெருக்கமாக வந்து நடிக்கின்றனர். அப்போது பெண்கள் அறுவெறுப்புடன் அலறி ஓதுங்குகின்றனர். ஆண்கள் டீக்கடைகளில் வடை சாப்பிட்டால் உடனே வந்து கையேந்துகின்றனர். தர மறுத்தால் பறித்து விடுகின்றனர்.

சில நேரங்களில் பர்சுகளை திருடிக் கொண்டு ஓடுகின்றனர். ரோட்டில் மிகவும் அநாகரீகமாக நடந்து கொள்கின்றனர். இவ்வளவுக்கும் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மனநோய் மருத்துவ சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. இங்குள்ள டாக்டர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை. இவர்களின் வேலையே ரோட்டில் சுற்றித்திரியும் மனநோயாளிகளை பிடித்து, சிகிச்சை அளித்து குணப்படுத்தி அனுப்புவது தான்.

ஆனால் இந்த வேலையை இவர்கள் முறையாக செய்யாததால், பெண்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகின்றனர் என பொதுமக்கள் புகார் எழுப்பி வருகின்றனர். தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரன் இந்த விஷயத்தில் நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் விரும்புகின்றனர்.

Updated On: 16 Oct 2021 7:13 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு