/* */

இரும்பு பட்டறை தொழிலாளர்களுக்கு பராமரிப்பு பதிவேடுகள் வழங்கல்

ஒவ்வொரு இரும்பு பட்டறையும் தங்களுக்கென தனி முத்திரை உருவாக்கி, தாங்கள் தயாரிக்கும் ஆயுதங்களில் பதிக்க வேண்டும்

HIGHLIGHTS

இரும்பு பட்டறை தொழிலாளர்களுக்கு  பராமரிப்பு பதிவேடுகள் வழங்கல்
X

பெரியகுளம் டி.எஸ்.பி., முத்துக்குமார், இரும்பு பட்டறை தொழிலாளி ஒருவருக்கு ஆயுதங்கள் விற்பனை குறித்த பராமரிப்புதிவேட்டினை வழங்கினார்.

தேனி மாவட்டம் முழுவதும் இரும்பு பட்டறை தொழிலாளர்களுக்கு பராமரிப்பு பதிவேடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பட்டறை வைத்துள்ளவர்கள் இனி தாங்கள் செய்யும் ஆயுதங்களில் முத்திரைகளை பதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் ரவுடிகள், சமூக விரோதிகள் கத்தி, அரிவாள், வாள், பட்டாக்கத்தி, கோடாறி, உட்பட பல்வேறு ஆயுதங்களை தவறான செயல்களுக்கு பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் ஆலோசனை கூட்டம், அந்தந்த சப்-டிவிசன்களுக்கு உட்பட்ட டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டங்களில் பங்கேற்கும் இரும்பு பட்டறை தொழிலாளர்களிடம், ஒவ்வொரு இரும்பு பட்டறையும் தங்களுக்கென தனி முத்திரை உருவாக்கி, தாங்கள் தயாரிக்கும் ஆயுதங்களில் பதிக்க வேண்டும். விவசாய பயன்பாட்டிற்கு தவிர வேறு யாருக்கும் ஆயுதங்களை விற்க கூடாது. தங்களது பட்டறையில் ஆயுதங்கள் வாங்குபவர்களின் பெயர், முகவரி, ஆதார் நம்பர், அலைபேசி நம்பர் உட்பட முழு விவரங்களையும் பதிவேட்டில் பதிவு செய்து, அவர்களது போட்டோ ஒட்டி கையொப்பம் பெற வேண்டும். அவர்கள் ஆயுதம் வாங்கிய தேதி, விலை, ஆயுதத்தின் முழு விவரத்தையும் பதிவு செய்ய வேண்டும். யார் யாருக்கு எப்பொழுது எத்தனை ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டது என்ற விவரத்தை அந்தந்த டி.எஸ்.பி.,க்களிடம் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதற்காக இரும்பு பட்டறை வைத்திருக்கும் அனைவருக்கும் எஸ்.பி., அலுவலகம் சார்பில் பராமரிப்பு பதிவேடுகள் வழங்கப்பட்டன.

Updated On: 1 Oct 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...