/* */

பாதுகாப்பாக பக்ரீத் கொண்டாடுவது குறித்து ஜமாத்தார்களுடன் ஆலோசனை கூட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாதுகாப்பாக பக்ரீத் பண்டிகை கொண்டாடுவது குறித்து டிஎஸ்பி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது

HIGHLIGHTS

பாதுகாப்பாக பக்ரீத் கொண்டாடுவது குறித்து  ஜமாத்தார்களுடன் ஆலோசனை கூட்டம்
X

பெரியகுளத்தில் பாதுகாப்பாக பக்ரீத் பண்டிகை கொண்டாடுவது குறித்து டிஎஸ்பி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் முஸ்லிம் மக்கள் அதிகளவில் வாழ்கின்றனர். இங்கு ஒவ்வொரு ஆண்டும் பக்ரீத் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.

இன்று டி.எஸ்.பி., முத்துக்குமார் தலைமையில் பெரியகுளம் காவல் நிலையத்தில் நாளை கொண்டாடவிருக்கும் பக்ரீத் பண்டிகையின் போது கடைபிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து அனைத்து ஜமாத்தார்களுடன் கூடிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் அளவுக்கு அதிகமாக பொது இடங்களில் கூட்டம் சேர்தல் கூடாது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. அந்தந்த பள்ளிகளிலே தொழுகை நடத்திக் கொள்ள வேண்டும், இளைஞர்கள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பைக் ரேஸ் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என டி.எஸ்.பி., அறிவுறுத்தினர்.

இக்கூட்டத்தில் அனைத்து ஜமாத்தார்கள். இன்ஸ்பெக்டர்கள் ஜெயச்சந்திரன், மீனாட்சி, எஸ்.ஐ., ராமபாண்டி மற்றும் எஸ்.எஸ்.ஐ.,க்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 July 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...