/* */

துப்புரவு பணியாளர்களுக்கு பிரியாணி வழங்கிய முன்னாள் ராணுவவீரர்கள்

தேனி பழனிசெட்டிபட்டியில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழாவை, முன்னிட்டு துப்புரவு பணியாளர்களுக்கு முட்டை பிரியாணி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

துப்புரவு பணியாளர்களுக்கு பிரியாணி  வழங்கிய முன்னாள் ராணுவவீரர்கள்
X

தேசிய முன்னாள் ராணுவவீரர்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் மாநில தலைவர் சுபேதார் மகாராஜன், துப்புரவு பணியாளர்களுக்கு முட்டை பிரியாணி வழங்கினார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாளை, தேனி பழனிசெட்டிபட்டியில் கொண்டாடிய தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு முட்டை பிரியாணி வழங்கப்பட்டது. இதையொட்டி இன்று, முன்னாள் ராணுவவீரர்கள் ஒருங்கிணைப்புக்குழுவுடன், தேனி சமூக நல்லிணக்க பேரவை, சம்மட்டி சமூக நல அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இணைந்து கொண்டாடினர்.

பேராசிரியர் ஜோசப்சேவியர் தலைமை வகித்தார். சம்மட்டி நாகராஜன் தலைமை வகித்தார். தேனி வட்டார ஜமாஅத் முன்னாள் தலைவர் சுலைமான், சமூக நல்லிணக்க பேரவை தலைவர் முகமதுஷபி, தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் மாநிலத்தலைவர் சுபேதார் மகாராஜன், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை மற்றும் நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்களின் பொதுச்செயலாளர் ராஜ்மோகன், அகில இந்திய மருத்துவக் கழகத்தின் மாநில செயலாளர் டாக்டர் என்.ஆர்.டி., தியாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முட்டை பிரியாணி வழங்கப்பட்டது. மேலும் பலருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On: 15 Oct 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?