இந்த செல்வமெல்லாம் மக்கள் தந்தது தானே?

இந்த செல்வமெல்லாம் மக்கள் தந்தது தானே?
X

பைல் படம்

மக்கள் எனக்கு கொடுத்த செல்வத்தை தான் நான் அவர்களுக்கு திரும்ப தருகிறேன் என எம்.ஜி.ஆர்., ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

சினிமா, அரசியல், பொதுவாழ்க்கை அத்தனையிலும் நட்புக்கு இலக்கணமாகவும், வள்ளலாகவும் திகழ்ந்த எம்.ஜி.ஆர்., ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியினை காணலாம்:

உங்களுக்குன்னு சொத்துகளைச் சேர்த்து வச்சிருக்கணும்னு எண்ணம் இல்லாமல் இப்படி வாரி வாரி வழங்கிக்கிட்டே இருக்கீங்களே, அதற்கு என்ன காரணம்?

எம்ஜிஆர் அளித்த பதில்: 'சொத்துகள் கடைசி வரை நம்மிடையே இருக்கும்னு நினைக்கிறது தப்புங்கிறது என் கருத்து! என்னை முதன் முதலாக கதாநாயகனா போட்டவர் ஜூபிடர் சோமு. ஒரு காலத்தில் இந்த ஸ்டுடியோ அவருக்கு சொந்தமாக இருந்தது. அவர் எதிரிலே வந்து நிக்கவே பயப்படுவோம்.

இப்போ அதே ஸ்டூடியோவுக்கு நான் பங்குதாரரா இருக்கேன். என்னை விட அனுபவத்திலும் ஆற்றலிலும் பன்மடங்கு உயர்ந்தவரான அவருக்கே அப்படி ஒரு நிலைமை வந்ததுன்னா நான் மட்டும் எத்தனை நாள் இந்த ஸ்டூடியோவுக்கு முதலாளியா இருந்திட முடியும்? எனக்கு இது புரியுது.

ஆனா, சில பேரு சட்டத்தின் பாதுகாப்பு நமக்கு இருக்குன்னு சொத்தையும் பணத்தையும் சேர்த்து வெச்சிக்கிறாங்க. நம்ம பாதுகாப்பிலே இல்லாதது, சட்டத்தின் பாதுகாப்பில் எத்தனை நாள் வாழ்ந்திட முடியும்?

அது மாத்திரமல்ல. இந்த செல்வமெல்லாம் யார் தந்தது? அதாவது மக்கள் தந்தது தானே? அவர்கள் தந்ததிலிருந்துதான் நான் தருகிறேன். தேவைக்கு மேல் பணத்தை சேர்த்து வைப்பதில் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியை விட பயனுள்ள வகையில் மற்றவர்களுக்கு உதவும் போது அடையும் மகிழ்ச்சியையே நான் பெரிதாக நினைக்கிறேன்' என பதிலளித்துள்ளார்.

Tags

Next Story