திருமணம் தாமதம் ஆனதால் வாலிபர் தற்கொலை

திருமணம் தாமதம் ஆனதால் வாலிபர் தற்கொலை
X
போடியில் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய தாமதம் ஆனதால், மனம் உடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய தாமதம் ஏற்பட்டதால், மனம் உடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

போடி ஜக்கம்பட்டி கருப்பணநாடார் தெருவை சேர்ந்தவர் யோகேஸ்வரன், 26. இவர் சென்னை ஐ.டி., கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு பணிபுரியும் பெண்ணை காதலித்துள்ளார். அவரை மணம் முடித்து வைக்குமாறு தனது குடும்பத்தினரிடம் கேட்டுள்ளார். அவர்கள் திருமணத்திற்கு சற்று கால அவகாசம் கேட்டுள்ளனர். இதனால் திருமணம் தாமதம் ஆகும் என மனம் உடைந்த யோகேஸ்வரன் வீட்டில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். போடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
application of ai in agriculture