/* */

தேனியில் மாணவர்களுக்காக பாலம் கட்டிய பள்ளி நிர்வாகம்

தேனியில் மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை நிர்வாகம் தனது பள்ளி மாணவர்களுக்காக தனியாக ரயில்வே மேம்பாலம் கட்டி உள்ளது.

HIGHLIGHTS

தேனியில் மாணவர்களுக்காக பாலம் கட்டிய  பள்ளி நிர்வாகம்
X

தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை உறவின்முறை நிர்வாகிகள் திறந்து வைத்தனர்.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை நிர்வாகம் ஏராளமான கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. இதில் மொத்தம் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு பாரஸ்ட் ரோடு, கொண்டு ராஜா லைன் பகுதியில் பாதைகள் உள்ளன. ஆனால் எடமால் தெருவிற்கும், பள்ளிக்கும் இடையே நகரின் மையத்தில் சரியாக ரயில்வே லைன் செல்கிறது. இதனால் எடமால் தெருவின் மறு பகுதியில் உள்ள தேனியில் வசிக்கும் மாணவர்கள் ரயில்வே லைனை கடந்து பள்ளிக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் சில கி.மீ., சுற்றி வர வேண்டும். அப்போது ரயில் வந்தால் எந்த வழியாக வந்தாலும் மூடப்பட்ட கேட்டில் சிக்க வேண்டும்.

இதனால் மாணவர்கள் பள்ளிக்கு வர தாமதம் ஆகும். எனவே எடமால் தெருவையும், ஆண்கள் மேல்நிலைப்பள்ளியையும் இணைத்து பள்ளி நிர்வாகம் முன்பு ரயில்வே மேம்பாலம் பாலம் கட்டியிருந்தது. அந்தப்பாலம் சேதமாகி விட்டது. இடையில் 11 ஆண்டுகள் தேனிக்கு ரயில் வரவில்லை. இதனால் பாலத்தின் அவசியம் தேவைப்படாமல் இருந்தது. தற்போது மதுரை- தேனி அகல ரயில் இயக்கப்பட உள்ளது. எனவே மாணவர்கள் அவதிப்படக்கூடாது என்பதற்காக தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை நிர்வாகம் தனது சொந்த செலவில் தனியாக ரயில்வே மேம்பாலம் கட்டி உள்ளது. இந்த பாலத்தை மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகள் திறந்து வைத்தனர்.

Updated On: 6 May 2022 2:58 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  4. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  6. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  8. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  9. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  10. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு