/* */

திருவிடைமருதூர் அருகே சாலை விரிவாக்க பணியின் போது சிலைகள் மீட்பு

திருவிடைமருதூர் அருகே சாலை விரிவாக்க பணியின் போது இரண்டு கருங்கல் சுவாமி சிலைகள் மீட்கப்பட்டன.

HIGHLIGHTS

திருவிடைமருதூர் அருகே சாலை விரிவாக்க பணியின் போது சிலைகள் மீட்பு
X

திருவிடை மருதூர் அருகே மீட்கப்பட்ட சுவாமி சிலைகள்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவில் கும்பகோணம் மயிலாடுதுறை சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. சாலையோரம் உள்ள பழமையான மரங்கள் வெட்டப்பட்டு அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் நரசிங்கன்பேட்டை கஸ்தூரி அம்மன் கோயில் அருகில் மரத்தின் வேர்களை பெயர்த்து எடுக்கும்போது மண்ணுக்குள் புதைந்திருந்த இரண்டு கருங்கல் சிலைகள் மீட்கப்பட்டது.

மூன்று அடி உயரம் உள்ள அப்பர், திருஞானசம்பந்தர் சிலைகள் அடி பீடத்துடன் கிடைத்ததால் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து சிலைகளைப் பார்த்து பூஜை செய்து வழிபட்டனர். இதுபற்றி நரசிங்கன்பேட்டை பஞ்சாயத்து தலைவர் மாலதி சதீஷ்ராஜ் திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அந்தப் பகுதியில் மேலும் மண்ணுக்குள் சிலைகள் புதைந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் அதனைப் பார்க்க மேலும் தோண்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 31 May 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  2. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  4. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  5. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  6. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  7. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  8. திருவண்ணாமலை
    செய்யாற்றில் மனைவியை வேலைக்கு சேர்த்ததால் வியாபாரி மீது தாக்குதல்
  9. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு