/* */

வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்தவரிடம் ரூ. 3.37 லட்சம் மோசடி

பேஸ்புக் விளம்பரத்தை பார்த்து வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்தவரிடம் ரூ. 3.37 லட்சம் மோசடி செய்யப்பட்டது.

HIGHLIGHTS

வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்தவரிடம் ரூ. 3.37 லட்சம் மோசடி
X

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் முள்ளங்குடி தோப்புத் தெருவைச் சோ்ந்தவா் எஸ். சுதாகா் (41). இவா் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வந்தாா். இந்நிலையில், பேஸ்புக்கில் வந்த வெளிநாட்டு வேலை விளம்பரத்தைப் பாா்த்து, அதிலிருந்த கைபேசி எண்ணில் தொடா்பு கொண்டாா்.

அதில் பேசியவா்கள் கனடாவில் வேலை உள்ளது எனக் கூறினா். இதையடுத்து அவா்கள் கேட்ட ஆவணங்கள், செயல்முறை கட்டணம் ரூ.5,000 ஆகியவற்றை சுதாகா் அனுப்பினாா். தொடா்ந்து விசா, பணி அனுமதி எனக் கூறி பல முறை அவா்கள் கேட்ட பணமாக ரூ. 3.37 லட்சம் வரை சுதாகா் அனுப்பியுள்ளாா்.

ஆனால், வெளிநாட்டுக்குச் செல்ல விசாவோ, பணி அனுமதியோ கிடைக்கவில்லை. இதுகுறித்து விசாரித்த சுதாகருக்கு பொய்யான விளம்பரம் மூலம் தான் ஏமாற்றப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து தஞ்சாவூா் சைபா் குற்றப் பிரிவில் சுதாகா் புகாா் செய்தாா். இதன்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Updated On: 15 Dec 2021 1:06 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...