/* */

தஞ்சை: ஆவணியாபுரத்தில் புதிய பாலம் அமைத்துத் தர அரசுக்கு கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் ஆவணியாபுரத்தில் புதிய பாலம் அமைத்துத் தர அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தஞ்சை: ஆவணியாபுரத்தில் புதிய பாலம் அமைத்துத் தர அரசுக்கு கோரிக்கை
X

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை - மஞ்சள்மல்லி செல்லும் சாலையில், ஆவணியாபுரத்தில் உள்ள செட்டிகுளத்துக்கு செல்லும் வடிகால் வாய்க்கால் பாலம், பல ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்தது. இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள், பொது மக்கள் தினந்தோறும் சிரமப்பட்டு சென்று வந்தனர். இப்பகுதியில் புதியதாக பாலத்தை கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள், மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் பணியாளர்கள், ஆவணியாபுரம் செட்டிகுளம் பாலத்தில் சிமெண்டினாலான குழாயை அமைக்க வந்தனர். இதனையறிந்த ஆவணியாபுரத்தை சேர்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆடுதுறை கிளை தலைவர் முஹம்மது அனஸ், கிளை செயலாளர் ஹிலால் அஹமத், கிளை பொருளாளர் ஜெஹபர் அலி, தஞ்சை வடக்கு மாவட்டபொருளாளர் மன்சூர் அலி, தஞ்சை வடக்கு மாவட்ட மருத்துவர் அணி வரிசை முஹம்மது மற்றும் பொதுமக்கள், சிமெண்ட் கட்டிடத்தை கட்டி தரவேண்டும், தரமற்ற குழாயினை பயன்படுத்தக்கூடாது, மழை காலத்தில் மீண்டும் பாலம் சேதமடையும் என குழாய் அமைக்கும் பணியினை மறித்தனர்.

இது குறித்து தகவலறிந்த திருநீலக்குடி போலீஸார், நிகழ்விடத்துக்கு சென்று நடத்திய பேச்சு வார்த்தையில், செட்டிகுளம் வாய்க்காலில் சிமெண்டிலான பாலம் கட்டித்தர வேண்டும் என முடிவு எடுக்கப்பட்ட நிலையில் குழாயினை அமைக்க வந்த திருவிடைமருதூர் நெடுஞ்சாலைதுறை ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் பணியாளர்கள் திரும்பி சென்றனர்.

Updated On: 13 May 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!