/* */

திருவையாறு அருகே நெல் அறுவடை எந்திரத்தில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு

திருவையாறு அருகே நெல் அறுவடை எந்திரத்தில் சிக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

திருவையாறு அருகே நெல் அறுவடை எந்திரத்தில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு
X

விபத்து ஏற்படுத்திய நெல் அறுவடை இயந்திரம்.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ள களர்பட்டி பகுதிகளில் சம்பா அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது . இந்த பகுதிகளில் உள்ள வயல்களில் அறுவடை பணிக்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து அறுவடை எந்திரங்கள் கொண்டு வந்து அறுவடை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் களர்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி விஜயகுமார் என்பவர் வயலில் புதுக்கோட்டை மாவட்டம் மாங்கொல்லை கீழப்பட்டியை சேர்ந்த கார்த்தி (வயது 30) என்பவர் அறுவடை எந்திரத்தின் மூலம் அறுவடை பணிகளை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அறுவடை எந்திரத்தில் திடீர் என்று கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்காக கார்த்தி அறுவடை எந்திரத்தின் மேல் ஏறி பெல்ட்டை சரி செய்ய முயன்று உள்ளார். அப்போது கார்திக்கின் கழுத்து பெல்டில் சிக்கி இறுக்கி உள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், அறுவடை எந்திரத்தில் சிக்கி இருந்த கார்த்திக்கை மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 6 March 2022 9:20 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி