/* */

தஞ்சாவூரில் ரூ 20.5 கோடியில் தூர்வாரும் பணி தீவிரம் : கண்காணிப்பு அதிகாரி ஆய்வு

தஞ்சாவூரில் ரூ 20.5 கோடி மதிப்பில் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை கண்காணிப்பு அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

தஞ்சாவூரில் ரூ 20.5 கோடியில் தூர்வாரும் பணி தீவிரம் : கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
X

தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ 20.5 கோடியில் தீவிரமாக நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை கண்காணிப்பு அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேட்டூர் அணையில் 90 அடிக்கு மேல் தண்ணீர் உள்ள நிலையில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை ஜூன் 12 தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

தண்ணீர் திறப்பதற்குள் கடைமடை பகுதி வரை செல்லும் வகையில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் டெல்டா மாவட்டத்தில் தூர்வார கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. தஞ்சை அருகே கூடலூர் வெண்ணாற்றில் பகுதியில் நடைபெறும் தூர்வாரும் பணியை தூர் வாரும் பணிகளுக்கான கண்காணிப்பு அலுவலர் பிரதீப் யாதவ், மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பின் பேட்டியளித்த அவர், தஞ்சை மாவட்டத்தில் 20.5 கோடி ரூபாயில் 1,169 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது. பணிகள் தொடங்கி 2 நாட்கள் ஆகிறது.

ஜூன் 15-ம் தேதிக்குள் தூர்வாரும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கடைமடை வரை தண்ணீர் சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Updated On: 1 Jun 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    அயோத்தி செல்லும் வில் மற்றும் அம்புவிற்கு காஞ்சிபுரத்தில் சிறப்பு...
  2. நாமக்கல்
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர்...
  3. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!
  4. திருமங்கலம்
    மதுரை சோழவந்தான் அருகே இலந்தை குளம் முத்தம்மாள் கோயில் மகா...
  5. ஈரோடு
    மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,468 கன அடியாக அதிகரிப்பு
  6. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  7. வீடியோ
    🔴LIVE : முரசு மக்கள் கட்சியின் தலைவர் தேவன் காவல் நிலையங்களின் மீது...
  8. ஈரோடு
    பெருந்துறை பகுதியில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்
  9. வீடியோ
    BaluMahendra-வை அப்பா போல் கவனித்த Garudan Director !#balumahendra...
  10. வீடியோ
    Vetrimaaran-னிடம் Viduthalai-2 Update கேட்ட ரசிகர்கள் !#vetrimaaran...