தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை:தஞ்சை மாவட்டத்தில் 59 பேர் கைது

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை:தஞ்சை மாவட்டத்தில் 59 பேர் கைது
போலீசார் மாவட்டம் முழுவதும் கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.

தஞ்சை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்குமாறு துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிட்டார்.அதன் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது தஞ்சை மாநகர பகுதிகளில் உள்ள தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் நடத்திய சோதனையில் 2 பேரையும், கிழக்கு போலீசார் 4 பேரையும், மேற்கு போலீசார் 4 பேரையும், தெற்கு போலீசார் 2 பேரையும், தாலுகா போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். வல்லம் போலீசார் 4 பேரையும், தமிழ்ப்பல்கலை கழக போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் போலீசார் மேற்கொண்ட சோதனையில் ஒரத்தநாடு பகுதிகளில் 6 பேரையும், பட்டுக்கோட்டை பகுதிகளில் 7 பேரையும், திருவையாறு பகுதியில் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தஞ்சை புறநகர் பகுதிகளில் 7 பேரையும், கும்பகோணத்தில் 10 பேரையும், திருவிடைமருதூர் பகுதியில் 6 பேரையும் கைது செய்தனர்.

Tags

Next Story