/* */

விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் விசாரணையின் போது உயிரிழப்பு

தஞ்சையில் நடந்த கொள்ளை வழக்கில், விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் விசாரணையின் போது உயிரிழந்தது குறித்து டிஐஜி, எஸ்பி விசாரணை

HIGHLIGHTS

விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் விசாரணையின் போது உயிரிழப்பு
X

காவல்நிலைய விசாரணையின்போது உயிரிழந்தவர்

தஞ்சை சீத்தா நகரில் கடந்த 10ஆம் தேதி 6 பவுன் நகை மற்றும் 7 லட்சம் ரொக்கம் கொள்ளை வழக்கில் சென்னையை சேர்ந்த அப்துல் மஜீத், தஞ்சையை சேர்ந்த சூர்யா, சீர்காழியை சேர்ந்த சத்தியவாணன் ஆகிய மூன்று பேரையும்,விசாரணைக்காக தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் அழைத்து வந்து தனிப்படை போலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின்போது, சீர்காழியை சேர்ந்த சத்யவாணன் என்பவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தஞ்சை சரக டி.ஐ.ஜி பிரவேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைக்காக அழைத்து வந்தவர் காவல்நிலையத்தில் உயிரிழந்த நிலையில், விசாரணையின் போது சத்தியவாணன் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதாக கூறியதாகவும், உடனடியாக அவரை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது உயிரிழந்ததாக காவல்துறையினர் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Updated On: 23 Aug 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?