ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதின் பெயர் மாற்றம்: பொன். ராதாகிருஷ்ணன் வரவேற்பு

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினை பெயர் மாற்றம் செய்து மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்ததற்கு விளையாட்டுத் துறையில் உச்சத்தை தொட்ட ஒருவரின் பெயரில் விருது வழங்குவது என்பது பாராட்டுக்குரியது இதனை நான் வரவேற்கிறேன் என தஞ்சையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார் .
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக நிர்வாகிகள் நேற்று கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தமிழக தலைவர் சிபி.ராதாகிருஷ்ணன் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதாக இருந்தது. காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
பின்னர் பொன் ராதாகிருஷ்ணன் மேலும் கூறியதாவது, மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்றைய தினம் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதில் தன்னெழுச்சியாக பொதுமக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பது, என் குடிநீருக்காக போராடுகிறேன். குடிதண்ணீருக்காக போராடுபவர்கள் மீது வழக்குப் போடுவது என்பது, தவித்த வாய்க்கு தண்ணீர் தராதவர்களாக நான் கருதுகிறேன். என்றும் தெரிவித்தார். எமர்ஜென்சி காலத்தில் திமுகவை சேர்ந்தவர்கள் எப்படி இருந்தார்கள் என்பது தெரியும்.. விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினை பெயர் மாற்றம் செய்து, மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் என, பிரதமர் அறிவித்ததற்கு விளையாட்டுத் துறையில் உச்சத்தை தொட்ட, ஒருவரின் பெயரில் விருது வழங்குவது என்பது பாராட்டுக்குரியது. இதனை நான் வரவேற்கிறேன் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu