அரசு சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி: அமைச்சர் திறப்பு
![அரசு சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி: அமைச்சர் திறப்பு அரசு சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி: அமைச்சர் திறப்பு](https://www.nativenews.in/h-upload/2023/03/18/1682385-pdk18tnj-poto-exib.webp)
தஞ்சாவூரில் நடைபெற் அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சியை திறந்து வைக்கிறார், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் மாநகராட்சி மைதானத்தில் "ஓயாஉழைப்பின் ஓராண்டு கடைக் கோடி தமிழரின் கனவுகளை தாங்கி"என்ற தலைப்பில் அரசின் சாதனைவிளக்க புகைப்பட கண்காட்சியினை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்.அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசுதலைமை கொறடா கோவி. செழியன் ஆகியோர் தலைமையில் மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் இன்று (18.03.2023) தொடங்கி வைத்தார்.
பின்னர் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க செய்தி மக்கள் தொடர்புதுறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் "ஓயாஉழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி" என்ற தலைப்பில் அரசின் சாதனைவிளக்க புகைப்படகண்காட்சி இன்று (18.03.2023) முதல் (27.03.2023) வரை தஞ்சாவூர் மாநகராட்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தபுகைப்படக் கண்காட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புதுறை, பள்ளிகல்வித் துறை, வேளாண் உழவர் நலத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைதுறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், தமிழ்நாடு மாநிலஊரக வாழ்வாதார இயக்கம், சுகாதாரத்துறை, இந்துசமய அறநிலையத் துறை, சமூகபாதுகாப்பு துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, வேளாண் பொறியியல் துறை, கோஆப்டெக்ஸ் ஆகிய பல்வேறு துறைகளின் அரங்கம் அமைக்கப்பட்டு அரசு திட்டங்களை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
அதுமட்டுமல்லாமல் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய அரசுதிட்டங்களின் தொகுப்புபுகைப்படங்களாக இடம் பெற்றுள்ளது. புகைப்படகண்காட்சியினை பார்வையிட வரும் பொது மக்களுக்கு பயன்பெறும் வகையில் புத்தக கண்காட்சி ,உணவு திருவிழா, சுய உதவி குழு உறுப்பினர்கள் தயாரித்தபொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் கண்டு மகிழ பல பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்து அமையப்பட்டுள்ளது.
மேலும் புகைப்பட கண்காட்சி அரங்கில் தினம் தோறும் மாலை நேரத்தில் பொது மக்களின் மனம் கவரும் பல்வேறு வகையிலான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிஅரசு இசைப்பள்ளி பள்ளிகல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் இன்று முதல் 10 நாட்கள் கலை இலக்கிய நிகழ்ச்சிகளாக நடத்தப்படும்.
அரசின் திட்டங்களை அறிந்து பயன்பெறும் வகையிலும்,நெகிழிக்கான மாற்று பொருட்களை விளக்கும் வகையிலும் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை பொது மக்கள் அனைவரும் குடும்பத்தோடு வந்து கண்டு களிக்க வேண்டும் என்றும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் .துரைசந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), எம். ஹெச். ஜவாஹிருல்லா (பாபநாசம்), தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் .சண் ராமநாதன், மாவட்டஊராட்சித் தலைவர் ஆர். உஷா புண்ணியமூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் ராமச்சந்திரன், மாநகராட்சி துணை மேயர் மரு. அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், முதன்மைகல்வி அலுவலர் சிவக்குமார், செய்திமக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா, உதவிமக்கள் தொடர்பு அலுவலர் செ.கார்த்திக் ராஜ் மற்றும் அனைத்துதுறைஅரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu