Begin typing your search above and press return to search.
மூன்றாம் இடத்தை பிடித்த சுயேச்சை வேட்பாளர் கொரோனாவிற்கு பலி
பட்டுக்கோட்டையில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட வி.பாலகிருஷ்ணன் (60) கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்தார்.
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டு 23,771 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தவர் வி.பாலகிருஷ்ணன்.
இவர் பட்டுக்கோட்டை வட்டம் சாந்தாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர். இவருக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்தார். உயிரிழந்த பாலகிருஷ்ணனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.