/* */

ரேஷன் கடையில் தரமற்ற பொருட்கள் வழங்கல்; பொதுமக்கள் சாலை மறியல்

திருவையாத்தங்குடியில் ரேஷன் கடையில் தரமற்ற பொருட்கள் வழங்கியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ரேஷன் கடையில் தரமற்ற பொருட்கள் வழங்கல்; பொதுமக்கள் சாலை மறியல்
X

திருவையாத்தங்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருவையாத்தங்குடியில் சுமார் 500க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இங்குள்ள ரேஷன் கடையில் மக்களுக்கு வழங்கும் ரேஷன் பொருட்கள் தரமற்றதாகவும், ரேஷன் கார்டுக்குரிய பொருட்களை வழங்காமல் அலைகழித்தனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் பலன் இல்லாத நிலையில் இன்று மதியம் பாபநாசம் திருக்கருகாவூர் சாலை திருவையாத்தங்குடி கிராம சாலையில் அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த அரசு அதிகாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய பொருட்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்திரவாதம் அளித்ததின் பேரில் மறியல் போராட்டம் வாபஸ் பெற்றது.

இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 25 Aug 2021 11:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  3. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  4. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  5. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  6. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  7. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  8. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  9. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!