பாபநாசம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து காவலாளி பலி: போலீஸ் விசாரணை

பாபநாசம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து காவலாளி பலி: போலீஸ் விசாரணை
X
எதிர்பாராதவிதமாக வாய்க்காலில் சைக்கிளுடன் தவறி விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது

பாபநாசம் அரயபுரம் கிராமத்தில் குடமுருட்டி ஆற்றில் இருந்து பிரிந்து வரும் வாய்க்காலில் ஆண் பிரேதம் கிடந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில், போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்திய விசாரணையில் ,இறந்து கிடந்தவர் மேல கபிஸ்தலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (45) என்பது தெரியவந்தது. இவர் பாபநாசத்தில் உள்ள ஒரு கடையில் காவலாளியாக வேலை செய்து வந்ததும், நேற்று சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக வாய்க்காலில் சைக்கிளுடன் தவறி விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து அவருடைய மனைவி சாந்தி (40) பாபநாசம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
why is ai important to the future